ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் மூலம் இலங்கையை வந்தடைந்த ஒரு மில்லியனாவது
பயணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சீனாவைச் சேர்ந்த ஜியான் யிங். அவர். தமது கணவர்
சகிதம் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி ஸ்ரீலங்கனின் ஸிழி 889 விமானம் மூலம்
இலங்கை வந்தடைந்தார்.
இதுகுறித்து கருத்துக் கூறிய ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் தலைவர், நிஷாந்த
விக்ரமசிங்க, இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகள், இலங்கையின் அழகை இரசிப்பதோடு
மட்டுமல்லாமல் இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பையும் இரசிப்பர்” என்றார்.
இலங்கையின் தேசிய விமானசேவை என்ற வகையில் 34 நாடுகளில் சுமார் 63 இடங்களில்
இலங்கையின் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிப்பதில் ஸ்ரீலங்கள் பங்களித்து வருகின்றது.
இந்தியாவிலும், சீனாவிலும் இருந்து இலங்கைக்கு வர்த்தக நோக்கத்துக்காகவும் உல்லாசப்
பயணிகளாகவும் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமான
விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இவ்வருடத்தில், 40 நாடுகளில் உள்ள 70 இடங்களுக்கு தனது சேவையை விஸ்தரிக்க ஸ்ரீலங்கன்
திட்டமிட்டிருகிறது.