புதிய அத்தியாயம் ஆரம்பம்
ஜனாதிபதி நாளை
இந்தியா பயணம்
‘ஜனாதிபதியையும் தூதுக்குழுவையும்
வரவேற்க இந்திய அரசும் மக்களும் பெரு மகிழ்ச்சியுடனேயே உள்ளனர்’
பிரதமர் மோடி தெரிவிப்பு
லோரன்ஸ் செல்வநாயகம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நாளை 15 ஆம் திகதி இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்று இவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் இலங்கை ஜனாதிபதியையும் தூதுக் குழுவினரையும்
வரவேற்பதற்கு இந்திய அரசாங்கமும் மக்களும் பெரும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய
ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிப்ப தற்கான அனைத்து நடவடிக்கைகளையும்
மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் இந்திய விஜயம் இலங்கை - இந்திய நல்லுறவில் புதிய அத்தியாயத்தைத்
தோற்றுவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
விவரம் |