ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 
காலை கூட்டத்தில் மயங்கி விழுந்த எட்டு வயது மாணவி மரணம்

காலை கூட்டத்தில் மயங்கி விழுந்த எட்டு வயது மாணவி மரணம்

பாடசாலை காலை கூட்டத்தின் போது மயங்கி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பமொன்று பலாங்கொட பகுதியில் நேற்று காலை இடம்பெற்றது. மயங்கி விழுந்த மாணவியை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்கையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வழமைபோல காலை கூட்டம் நேற்று இடம்பெற்று ள்ளதோடு ஏனைய மாணவிகளுடன் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த 3ம் வகுப்பில் பயிலும் 8 வயதான சிறுமி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இச்சிறுமியை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்கையில் சிறுமி இறந்துள்ளார். இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை இடம்பெற உள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி