ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 
மீனவர்களின் குடும்பங்களுக்கு கொடுப்பனவு

மீனவர்களின் குடும்பங்களுக்கு கொடுப்பனவு

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 இலங்கை மீனவர்களையும் விடுவிப்பது தொடர்பில் உரிய தலையீடு மேற்கொண்டு அவர்களை துரிதமாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் நிமல் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

மியன்மாரில் கடந்த 4 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மீனவர்களின் குடும்பத்தவர்கள் நேற்று மீன்பிடி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீன்பிடி அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவின் வழிகாட்டலுடன் இவர்களை சந்தித்த அமைச்சின் செயலாளர் மீனவர்கள் விடுதலையாகும் வரை அவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

திருகோணமலை மற்றும் குடாவெல்ல பகுதிகளில் இருந்து இரு படகு களில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கடந்த ஒக்டோபர் 6ம் திகதி மியன் மாரில் வைத்து கைது செய்யப்பட் டிருந்தனர்.

வெளிநாடுகளில் கைதான மீனவர்களை விடுவிப்பதற்காக ராஜதந்திர ரீதியான பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி