ஹெட்ஜிங் ஒப்பந்தம்: நடவடிக்கை எடுக்க அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது
ஹெட்ஜிங் ஒப்பந்தம்:
நடவடிக்கை எடுக்க அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது
ஹெட்ஜிங் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை
எடுப்பதற்காக அடுத்த மாதம் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்பிக்க இருப்பதாக மின்
சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதனுடன் தொடர்புள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
ஹெட்ஜிங் ஒப்பந்தம் காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கே பல கோடி ரூபா நஷ்டம்
ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சரவை பத்திர மொன்றை தயாரித்து வருவதாக
குறிப்பிட்ட அமைச்சர், இதனுடன் தொடர்புடையவர்களை தராதரம் பராது தண்டிக்க தயங்கப்
போவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
எரிபொருளுக்கென விலை சூத்திர மொன்றை தயாரித்து வருவதாகவும் எதிர்காலத்தில்
பெற்றோலிய கூட்டுத்தாபனம் அடைந்து வரும் நஷ்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க
இருப்பதாகவும் அவர் கூறினார்.