இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண் டாவது ஒரு நாள் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவௌ,
மஹிந்த ராஜபக்' சர்வதேச மைதா னத்தில் இன்று மாலை 02.30 மணிக்கு ஆரம்ப மாகும்.
இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மூன்று ஒரு நாள் போட்டிகளும் விளையாடுவதற்காக இலங்
கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, டெஸ்ட் தொடரில் (2-0)
படுதோல்வியடைந்த நிலையில் முதலாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று, இன்று
இரண்டாவது போட்டியில் அதே அணியுடன் களமிறங்குகிறது.
இன்றைய போட்டியில் சிரேஷ்ட வீரர்களான டில்சான், சங்கக்கார, மஹேல அணித்தலைவர்
மெத்திவ்ஸ் ஆகியோர் சிறப்பான பெறுபேற்றை வெளிப் படுத்துவார்கள் என்பதில்
சந்தேகமில்லை. அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை மிரட்டிய
சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இப் போட்டியிலும் அசத்துவார் என்று
எதிர்பார்க்கலாம்.
பாகிஸ்தான் அணி கடைசி கட்டத்தில் முதலா வது போட்டியில் வெற்றி பெற்றது. இலங்கை
அணியில் நல்லதுடுப்பாட்டம் இருந்தும் கடைசி நேரத்தில் தோல்வியடைந்தது.
இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடனான போட்டியிலும் இதே மைதானத்த்pல் தோல்வி அடைந்
திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ இலங்கை கடந்த போட்டியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு தொடரை
சமப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப் போம்.
மூன்றாவதும் இறுதியுமான போட்டி தம்புள்ளை யில் இடம்பெறும்.