ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

இலங்கை - பாகிஸ்தான் இரண்டாவது ஒரு நாள் போட்டி: நுழைவுச்சீட்டு வாங்கியவர்களுக்கு பணம் மீளத்தரப்படும்

இலங்கை - பாகிஸ்தான் இரண்டாவது ஒரு நாள் போட்டி: நுழைவுச்சீட்டு வாங்கியவர்களுக்கு பணம் மீளத்தரப்படும்

இலங்கை கிரிக்கெட்

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்த இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டிக்காக நுழைவுச் சீட்டுகளை வாங்கியவர்கள் அதற்கான பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளமுடியும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் ஊடக முகாமையாளர் ரஜpத் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல், 10 ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் 4 மணி வரை எஸ்.எஸ்.சி மைதானத்தில் அமைந்துள்ள இலங்கை கிரிக்கெட் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்' சர்வதேச மைதா னத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டிக்கான அனுமதி இலவசமாக வழங்கப்படவுள்ளது.

பிரதான பார்வையாளர் மண்டபம், அதி உயர் பார்வையாளர் மண்டபம் ( புசயனெ ளுவயனெ ) தவிர்ந்த அனைத்து பகுதிகளுக்கும் இலவசமாக செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி