பிரதமர் நரேந்திர மோடிக்கு, 63, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் நேற்று முன்தினம்
உடல் நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர், ஜனாதிபதி போன்ற உயர் பொறுப்பில்
இருப்பவர்கள் அவ்வப்போது உடல் நல பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மூன்று
மாதங்களுக்கு ஒருமுறை பிரதமருக்கு உடல் நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு உடல் நல பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதற்காக நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு எய்ம்ஸ் மருத்து வமனைக்கு வந்த அவர்,
அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்தார். இதனால் மருத்துவ மனை வளாகத்தில்
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.