வரலாற்று சிறப்புப் பெற்ற சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ முன்னைநாதப் பெருமான் தேவஸ்
தானத்தின் வருடாந்த கொடியேற்ற விழா இன்று செவ்வாய்க் கிழமை பகல் 12.00 மணிக்கு
நடைபெறும்.
இக்கொடியேற்ற விழாவில் நாட்டின் நாலா பகுதிகளிலிரு ந்தும் மெய்ய டியார்கள் கலந்து
கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாலய உற்சவத்தை முன்னிட்டு வழமை போல் போக்குவரத்து சேவைகள், குடிதண்ணீர் வசதிகள்,
கழிவறைகள், வாகன தரிப்பிட ங்கள் என்பன அமைக்கப்பட உள்ளன. பாதுகாப்பை முன்னிட்டு
தற்காலிக பொலிஸ் நிலையம் ஒன்றும்
இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 28 தினங்களாக கொண்டாடப்படும் இவ்வாலய
உற்சவத்தினங்களில் விசேட அபிஷேகம் பூசை வழிபாடுகள் என்பன நடைபெறும்.
இங்கு நடைபெறும் முக்கிய உற்சவங்களாக எதிர்வரும் 31ம் திகதி விநாயகர் உற்சவம்,
முதலாம் திகதி சுப்பிரமணியர் உற்சவம், 2ம் திகதி மஹா விஷ்ணு உற்சவம், 3ம் திகதி
தீமிதிப்பு விழா அதைத் தொடர்ந்து சிவனடியார் விழா 4 ம் திகதி பிச்சாடனர் உற்சவம்,
5ம் திகதி நடேசர் உற்சவம், 6ம் திகதி வேட்டை திருவிழா, 7ம் திகதி தேர்திருவிழா 8ம்
திகதி தீர்த்த உற்சவம், 10ம் திகதி பூங்காவனம், 11ம் திகதி சண்டேஸ்வரர் உற்சவம்
என்பன நடைபெறும்.