ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 
செப்.4,5ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

செப்.4,5ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு செப்டெம்பர் மாதம் 4 ஆம் 5 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிவித்தார்.

செப்டெம்பர் 20 ஆம் திகதி நடைபெற உள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு தபால் மூலம் விண்ணப்பிப்பதற்காக ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

தபால் மூலம் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட இருப்பதாக தேர்தல் திணைக்களம் கூறியது. தபால் மூல வாக்காளர் அட்டைகள் 25 ஆம் திகதி தபால் திணைக்களங்களில் கையளிக்கப்பட உள்ளன.

4, 5 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டெம்பர் 11 ஆம் திகதி வாக்களிக்க அவகாசம் வழங்கப்படுமென உதவி தேர்தல் ஆணை யாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி