ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள்
நேற்று முதல் விநியோகிக்கப்பட்டு வருவதாக உதவித் தேர்தல் ஆணையாளர் மொஹமட்
தெரிவித்தார். நேற்று மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான
விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன.
பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்கள் வழங்கும்
நடவடிக்கை புதன்கிழமை வரை பிற்போடப்பட் டுள்ளது. வேட்பாளர் பட்டியல் தயா ரிப்பது
பூர்த்தியடையாததால் விருப்பு இலக்கங்கள் வழங்கும் பணி தாம தமடைந்துள்ளது. நாளை (13)
பதுளை மாவட்ட விருப்பு வாக்கு இலக்கங்கள் விநியோகிக்கப்பட இருப்பதாக
அறிவிக்கப்படுகிறது.
இம்முறை தேர்தலில் 617 வேட்பாளர் கள் போட்டியிடுகின்றனர்.