தி. மு. க. மாநில மாநாடு திருச்சியில் இன்று (சனிக் கிழமை) தொடங்கி 2 நாட்கள்
நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வ தற்காக தி. மு. க. தலைவர் கருணாநிதி
திருச்சி சென்று ள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, மரியாதை
நிமித்தமாகவே டில்லியில் சோனியா காந்தியை கனிமொழி சந்தித்ததாக கூறினார். மத்தியில்
எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பதை திட்டவட்டமாக கூற முடியாது. அண்ணாவின் கொள்கைகளை
மையமாக வைத்து தேர்தலை சந்திப்போம் என்று கூறியுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் மூன்றாவது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவது
குறித்தும், அக்கட்சிகள் வெற்றிபெறுமா என்றும், அக்கட்சிகள் காங்கிரஸ் ஆதரவு
அளிப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறுவது தொடர்பாக
செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.
அப்போது மூன்றாவது அணி குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று கருணாநிதி கூறினார்.
பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அறிகுறியாக அமையும் என்று
கருணாநிதி தெரிவித்துள்ளார்.