கேரளாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்
சோனியா முறைப்படி பிரசாரத்தை தொடக்கி வைக்க உள்ளார். தேர்தல் வரும் ஏப்ரல் மே
மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பா. ஜ. வின் பிரதமர்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம்
மேற்கொண்டு பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ்
துணைத் தலைவர் ராகுல் தலைமையிலான குழு ஒன்றை சோனியா அறிவித்தார். இந்த அறிவிப்பைத்
தொடர்ந்து இன்று சனிக்கிழமை கேரள மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அங்கிருந்த படியே முறைப்படியான தேர்தல் பிரசாரத்தை தொடக்கி வைக்க உள்ளதாக
கூறப்படுகிறது.
கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் சோனியா அங்கிருந்த
படியே பிரசாரத்தை தொடக்குகிறார். பிரசார பேரணியில் மத்திய பாதுகாப்புத் துறை
அமைச்சர் ஏ. கே. அந்தோணி, வயலார்ரவி, மாநில முதல்வர் உம்மன்சாண்டி, மாநில உள்துறை
அமைச்சர் ரமேஷ்சென்னிதாலா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்
முகுல் வாஷ்னிக் உட்பட பலர் கலந்து கொள்வார்கள்.