ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

விமானத்தில் வெடிகுண்டு புரளி: இலங்கையர் கைது

விமானத்தில் வெடிகுண்டு புரளி: இலங்கையர் கைது

சுவீடன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அச்சுறுத்திய இலங்கையர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து சுவீடனின் ஆர்லாண்டா ஸ்டொக்கோல்ம் விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணித்த நபர் ஒருவர் திடீரென தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தியதுடன், விமானிகள் இருக்கும் அறைக்குள் நுழைய முற்பட்டுள்ளார்.

குறித்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெடிகுண்டு வைத்திருப்பதாக அச்சுறுத்திய நபர் விமானப் பணியாளர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு ஆசனத்தில் இருத்தப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் குறித்த நபர் விமானப் பணியாளர்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி