இந்தியாவுக்கு தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றவர் கைது
இந்தியாவுக்கு
தங்க பிஸ்கட்டுகளை
கடத்த முயன்றவர் கைது
எம் எஸ். பாஹிம்
இந்தியாவுக்கு 13 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த
முயன்ற நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளினால் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
தனது
பயணப் பொதியினுள் மறைத்து 227 கிராம் பெறுமதியான இரு தங்க பிஸ்கட்டுகளை கடத்த
தயாரான போதே இவர் பிடி பட்டதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி கூறினார். சென்னை
செல்லும் இந்திய விமானத்தில் இவர் செல்ல தயாராகியிருந்ததாகவும் அறிவிக்கப்படு கிறது.
இவர் கல்முனையைச் சேர்ந்த வரென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.