ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் 10 வேட்பு மனுக்கள் தாக்கல்

அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் 10 வேட்பு மனுக்கள் தாக்கல்

33 சுயேச்சைகள் நேற்று கட்டுப்பணம்

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியி டுவதற்காக நேற்றைய தினம் இரண்டு அரசியல் கட்சிகளிடமிருந்து நான்கு வேட்பு மனுக்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.

நேற்று பிற்பகல் 4.00 மணிவரை அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்களிடமிருந்து 10 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி, 33 சுயேச்சைக் குழுக்கள் நேற்று கட்டுப்பணம் செலுத்தி யிருந்தன. இவற்றுள் ஆறு சுயேச்சைகள் கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வேட்புமனு வீதமும் மாத்தறையில் இரண்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

அரசியல் கட்சிகளான ஜனசத்த பெரமுன மற்றும் ஒக்கம வெசியோ ஒக்கம ரஜவரு ஆகியன காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கும் நேற்றைய தினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி