ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் சுமார் 1000 கைதிகள் இன்று விடுதலை
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ்
சுமார் 1000 கைதிகள் இன்று விடுதலை
(எம். எஸ். பாஹிம்)
இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் ஆயிரம் கைதிகள் விடுதலை
செய்யப்பட இருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நாடு பூராவும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து
இவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். சிறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையோர் மற்றும்
தண்டப் பணம் செலுத்த முடியாதவர்கள் அடங்க லான சுமார் ஆயிரம் பேர் இம்முறை
விடுவிக்கப்படுகின்றனர். இவர்கள் தொடர்பான பெயர் விபரங்கள் நீதிமன்றங்க ளினூடாக
திரட்டப்பட்டு சிறைச்சாலை தலைமையகத்துக்கு வழங்கப்பட்டது.