யுத்தம் முடிவுற்று 4ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி
யுத்தம் முடிவுற்று 4ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி
(பொத்துவில் தினகரன் நிருபர்)
யுத்தம் முடிவுபெற்ற நான்கு ஆண்டு நிறைவையொட்டி பொத்துவில் றோயல் விளை யாட்டுக்
கழகம் விளையாட்டு சுற்றுப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக றோயல் கழகத்தின்
ஏற்பாட்டாளர் சுல்பிஹார் தெரிவித்தார்.
இன்று மாலை 06.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள இரவு நேர விளையாட்டுப் போட்டி
உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் துறையை சார்ந்த 40 கழகங்கள் இதுவரை
விண்ணப்பித்துள்ள தாகவும், ஒரு வாரம் நடைபெற வுள்ள இச்சுற்றுப் போட்டி மெளலானா நகர்
றோயல் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதுடன் கலை கலாசார நிகழ்ச்சிகளும்
நடைபெறவுள்ளன.
இந்த 4வது யுத்த நிறைவு விளையாட்டு சுற்றுப் போட்டியில் இராணுவத்தின் அம்பாறை
மாவட்ட கட்டளைத் தளபதி பிரதம அதிதியாகவும் பொத்துவில் பொறுப்பதிகாரி மற்றும்
பொத்துவில் பிரதேச செயலாளர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் பொலிஸ் விசேட அதிரடிப்
படை, விமானப்படை, கடற்படை தளபதிகளும் கெளரவ அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ள தாக
சுல்பிஹார் மேலும் தெரிவித்தார்.