இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை
முடிவுக்கு கொண்டுவர புதிய யோசனை
* மீனவர்களை விடுவித்து வள்ளங்களை தடுத்து வைத்தல்
* கூட்டு நடவடிக்கை குழுவை மீண்டும் செயற்படுத்தல்
* தமிழ் நாட்டு முதலமைச்சரின் இரட்டை நிலைப்பாட்டை களைதல்
அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீன்பிடி வள்ளங்களை கைப்பற்றி
தடுத்து வைத்துக் கொண்டு மீனவர்களை மட்டும் உடனடியாக விடுதலை செய்யும் விதத்தில்
புதிய நடைமுறையொன்றை கொண்டு வருவது பற்றி கடற்றொழில் அமைச்சு ஆலோசித்து வருவதாக
அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக மீனவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த
இதுபோன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே
மீனவர்களை விடுதலை செய்வதுடன் அவர்களது வள்ளங்களை தடுத்து வைத்துக்கொள்வதற்கு
ஏதுவாக நடைமுறை யொன்றை கடைப்பிடிக்க கூடியவாறு தேவையான சட்ட நடவடிக்கைகள் குறித்து
சட்ட மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விவரம் |