பிரித்தானிய தூதரக அமைச்சின் கிரிக்கெட் குழுவுக்கும் பிரித்தானியாவின் இலங்கைக்கான
உயர்ஸ்தானிகர் குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற சினேபூர்வ கிரிக்கெட் போட்டியின்
போது இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. நேற்று முன்தினம் லண்டனில் “ஒலட் பின்வி
லேன்ஸ், விளையாட்டரங்கில் இப்போட்டி இடம்பெற்றுள்ளதுடன் இந்நிகழ்வில் இலங்கைக்கான
பிரித்தானிய தூதரகத்தின் தூதுவர் வைத்தியர் கிரிஸ் நொனிஸ் மற்றும்
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரகத்தின் அதிகாரிகள் பலரும்
கலந்துகொண்டனர்.
இவ்விரு நாடுகளுக்கிடையில் சுமுகமான உறவினை ஏற்படுத்துவதே இப்போட்டியின்
நோக்கமாகும் ஆகவே இரண்டாம் முறையாகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் கெளன்சியூலர் பிரிவின்
தலைவர் சட்டத்தரணி சமிந்தவின் அறிவுறுத்தலுக்கும், வழிகாட்டலுக்கும் அமையவே ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.