கல்முனை பிர்லியண்ட் கழகத்தின் 300 வது உதைபந்தாட்டம்
கல்முனை பிர்லியண்ட் கழகத்தின்
300 வது உதைபந்தாட்டம்
அமைச்சர் அதாவுல்லா பிரதம அதிதி
(மாளிகைக்காடு குறூப் நிருபர்)
கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் 300 வது உதை பந்தாட்டப் போட்டி இன்று
வெள்ளிக்கிழமை மாலை கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ. எல். சம்சுதீன் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி
உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளூராட்சி மாகாண
சபைகள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லா பிரதம அதிதியாகவும், கல்முனை மாநகர
மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் கெளரவ அதிதியாகவும், கல்முனை மாநகர சபை உறுப்பினர்
ஏ. எம்.றியாஸ், முன்னைநாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ. றஸாக் (ஜவாத்)
ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்க தலைவரும், கல்முனை
மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ. எம். றக்கீப், கொழும்பு சஹாம் ரெவல்ஸ்
முகாமைத்துவ பணிப்பாளர் ஏ. ஸி. பைஸால் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
300 வது உதைபந்தாட்ட போட்டியில் கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகமும்,
மாவனெல்ல யுனைடெட் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.
இன்றைய நாள் நிகழ்வில் கல்முனை பிரதேசத்தின் நட்சத்திர உதைபந்தாட்ட வீரர் எம். ஸி.
றஹீம் பாராட்டி கெளரவிக்க ப்படவுள்ளார்.