ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 
கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாகத் தாடா கண்ணுக்குள் விளையாடும் கலையே நீவாடா

கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாகத் தாடா கண்ணுக்குள் விளையாடும் கலையே நீவாடா

தீபாவளி பாடல்

நாம் முன்தீர்மானம் செய்யும் அனைத்தையும் தவிடு பொடியாக்கி அசுர வேகத்தில் சுழல்கிறது காலம். எதைப்பற்றியும் கவனம் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்திலிருந்தே விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. பண்டிகைகள் சமூக வாழ்வின் ஓர் அங்கம்.

வேலை நிமித்தமாக பிரிந்து இருக்கும் மனிதர்களை ஒன்று சேர்க்க பண்டிகைகள் உதவுகின்றன. முன் எப்போதையும் விட தற்போது, செய்யும் வேலை காரணமாக மனிதர்கள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்க்க, ஒரு நாளாவது தங்களது இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட பண்டிகைகள் உதவுகின்றன.

தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து தற்போது பலவிதமான கருத்துகள் உருவாகியுள்ளன. சுற்றுச் சூழல் சார்ந்து சிந்திக்க ஆரம்பித்திருப்பது மிக நல்ல விசயம். ஆனால் ஒரே நாளில் நம் பட்டாசு கொளுத்துவதை நிறுத்திவிட முடியாது. பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள்.

யாரும் விருப்பப்பட்டு வெடிமருந்துடன் கழியும் பட்டாசு செய்யும் வேலைக்குச் செல்லவில்லை. உயிர் பிழைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் பட்டாசு செய்யும் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு மாற்று வழி தேட வழி செய்துவிட்டு பட்டாசு கொளுத்துவதை நிறுத்த முயலவேண்டும்.

பட்டாசின் தீமைகள் குறித்துப் பேசும் எத்தனைபேர் பட்டாசு வெடிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் முடிந்தவரை பட்டாசை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் முடியாதபோது குறைவாக பயன்படுத்தலாம்.

எப்படிப் பார்த்தாலும் பண்டிகைகள் நம் சமூக வாழ்வின் வரம். பண்டிகைகள் காரணமாக வித விதமான பொருட்கள் விற்பதன் மூலம் பயனடையும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். பண்டிகைகளை தவிர்க்க வேண்டியதில்லை. காலத்துக்கேற்ற மாற்றத்தைச் சந்திக்காத எதுவும் நிலைப்பதில்லை.

காலத்திற்கு ஏற்ற மாற்றத்துடன் பண்டிகைகளைக் கூடிக்கொண்டாடுவோம்.

தீபாவளி குறித்து எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன்.

எ.எம். ராஜாவின் இசையமைப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த கல்யாண பரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற உன்னைக் கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட’ பாடல் தீபாவளிப் பாடல்களில் ஒன்று.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலிது. இப்பாடலை ஜிக்கி பாடியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி