ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 
ஜமுனாராணி சினிமாவில் அறிமுகமானது நடன மங்கையாக

ஜமுனாராணி சினிமாவில் அறிமுகமானது நடன மங்கையாக

மறக்க முடியாத பழைய குரல்களில் ஒன்று ஜமுனாராணியினுடையது. இன்று குத்துப் பாடல்கள் என இளசுகளைக் கவரும் பாடல்களை அன்று பாடியவர்களில் ஜமுனா ராணியும் ஒருவர். ஜமுனா ராணி எல். ஆர். ஈஸ்வரி ஆகியோரின் அந்தக் கால குத்துப் பாடல்கள் அந்தக் கால இளைஞர்களை மட்டுமல்லாது முதியவர்களையும் கவர்ந்திழுத்தன.

1952 ஆம் ஆண்டு மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த வளையாபதி படத்தில் டி. எம். எஸ். ஸ¤டன் இணைந்து குளிர்தாமரை மலர்ப் பொய்கை என்ற பாடசாலை முதன் முதலாகப் பாடினார் ஜமுனாராணி. அவருடைய குரலில் ஒரு கவர்ச்சி இருந்தது. அதே படத்தில் உள்ள இன்னொரு பாடலான குலுங்கிடும் பூவில் எல்லாம் தேனருவி பாய்வதனால் என்ற பாடல் தான் ஜமுனா ராணியை அடையாளம் காட்டியது. இந்த இரண்டு பாடல்களும் பாரதிதாசனால் எழுதப்பட்டவை.

டி.எம். செளந்தரராஜனின் கம்பீரக் குரலுக்கு இணையாக ஜமுனாராணி பாடிய பாடல்கள் இன்றையக்கும் மறக்க முடியாதவையாக உள்ளன. ஏழுவயதில் சினிமாவுக்கு குரல் கொடுத்தவர். 14 வயதில் கதாநாயகிக்காக பின்னணி பாடியவர். நான்கு வயதில் சங்கீதப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். ஐந்து வயதில் வானொலிக்காக தேர்வு செய்யப்பட்டவர் போன்ற பெருமைகளின் சொந்தக்காரர் ஜமுனாராணி.

1964 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான தியாகய்யா வெளியானபோது பிரபல இசை வித்தகர்களின் பாடல்கள் அப்படத்தில் இடம்பெற்றன. அவர்களுடன் ஏழு வயதான ஜமுனாராணியும் மதுரை நகரிலோ என்ற பாடலைப் பாடி இருந்தார். நடன மங்கையாகத் தான் சினிமாவில் ஜமுனாராணி அறிமுகமானார். நாடகங்களில் தனியாகவும் குழுவாகவும் நடனமாடினார்.

தீன பந்தாஜீவன் முக்திராவால் மீதி, கருடகர்வ பங்கயம் போன்ற தெலுங்குப் படங்களில் ஜமுனா ராணி நடனமாடி இருந்தார். 1952 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ்த்திரை உலகின் பெரும் புரட்சியை உருவாக்கிய தேவதாஸ் படத்தில் ஜமுனா ராணி பாடிய “ஒ தேவதாஸ் படிப்பு இதானா வாத்தியாரு தூங்கிப் போனா ஓட்டம் பிடிக்கிறே’ என்ற பாடல் ஜமுனா ராணிக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி