மாத்தறை - பொல்ஹேன கடற்கரை பிரதேசம் சுற்றுலா வலயமாகும்
மாத்தறை - பொல்ஹேன கடற்கரை
பிரதேசம் சுற்றுலா வலயமாகும்
(மாத்தறை தினகரன் நிருபர்)
மாத்தறை - பொல்ஹேன கடற்கரைப் பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்குத் தேவையான காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது
மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீன்பிடி வள்ளங்கள் தரிப்பு இடத்தையும் அகற்றுவதற்கும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
பொல்ஹேனையிலுள்ள சுண்ணாம்புப் படிவங்களை பாதுகாக்கும் விதத்தில் இந்த அபிவிருத்தித்
திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அத்துடன் உயிர் பாதுகாப்புப் பிரிவொன்றும்
ஏற்படுத்தப்படும். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான சகல
வசதிகளும் இச்சுற்றுலா வலயத்தில் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. நகர அபிவிருத்தி
அமைச்சின் உதவியுடன் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.