ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 
77ல் வெளிவந்த ரஜினி படங்கள்

77ல் வெளிவந்த ரஜினி படங்கள்

அவர்கள், கவிக்குயில், ரகுபதி ராகவன் ராஜாராம், சிலசும்மா செப்பிந்தி (தெலுங்கு), புவனா ஒரு கேள்விக்குறி, ஒந்து பிரேமதே கதே (கன்னடம்), 16 வயதினிலே, சகோதர சவால் (கன்னடம்), ஆடு புலி ஆட்டம், காயத்ரி, குங்கும் ர§க்ஷ (கன்னடம்), ஆறுபுஷ்பங்கள், தொலிரேயி கடிசிந்தி (தெலுங்கு), ஆம் மே கதா (தெலுங்கு), கலாட்டா சம்சாரா (கன்னடம்)

கவிக்குயில்

எஸ். பி. தமிழரசி தயாரித்த இந்தப் படத்தில், சிவகுமார், ஸ்ரீதேவி பிரதான வேடத்தில் நடித்தனர். ரஜினிகாந்துக்கு ஜோடியாக லட்சுமி ஸ்ரீ நடித்தார். மற்றும் எஸ். வி. சுப்பையா, ‘படாபட்’ ஜெயலட்சுமி ஆகியோரும் நடித்தனர். ஆர். செல்வராஜ் எழுதிய கதைக்கு திரைக்கதை - வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம். தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்தனர். இளையராஜா இசை அமைப்பில், பாலமுரளிகிருஷ்ணா பாடிய சின்னக்கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் பெரிய ஹிட்டாகியது.

ரகுபதி ராகவன் ராஜாராம்

இந்தப் படத்தில் ரஜினியுடன் விஜயகுமார், சுமித்ரா, ராம்குமார், ஷோபனா ஆகியோர் நடித்தனர். ராம் – ரஹீம் கதை - வசனம் எழுதிய இப்படத்தை இயக்கியவர் துரை.

முதலில் இப்படத்துக்கு ரகுபதி ராகவராஜாராம் என்று பெயர் வைத்திருந்தனர். தணிக்கை குழுவின் ஆலோசனைப்படி ‘ரகுபதி ராகவன் ராஜாராம்’ என்று மாற்றப்பட்டது.

புவனா ஒரு கேள்விக்குறி

ரஜினிகாந்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ மகரிஷி எழுதிய கதைக்கு திரைக்கதை - வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம். எஸ். பி. முத்துராமன் டைரக்ஷனில் ரஜினி நடித்த முதல் படம்.

இந்தப் படத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால் அதுவரை நல்லவராகவே நடித்து வந்த சிவகுமார் கெட்டவராகவும், கெட்டவராக நடித்து வந்த ரஜினிகாந்த் நல்லவராகவும் நடித்தனர்.

இந்த மாற்றம் நன்றாக ‘கிளிக்’ ஆகியது. மாறுபட்ட வேடங்களையும் தன்னால் நன்றாக நடிக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். சிவகுமாரால் கைவிடப்பட்ட சுமித்ராவுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கும் நல்லவராக அவர் நடித்ததை ரசிகர்கள் வரவேற்றனர்.

ரஜினி பாடுவதுபோல அமைந்த ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள! ஒரு ராணியும் இல்லை வாழ! என்ற பாடல், பெரிய ஹிட் ஆகியது.

2.9.1977 ல் வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. இந்தப் படத்துக்கு, தமிழக அரசு ரூ. 1 இலட்சம் மானியம் வழங்கியது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி