ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகத்தின் சொத்தையே ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு போன
நட்சத்திர நடிகைகள் குடும்பத்தில் அம்பிகாதான் மூத்தவர். அமெரிக்காவில் விஞ்ஞானியாக
இருக்கும் ஒரு மணாளனுக்கு வாழ்க்கைப்பட்டுச் சென்றவர் மிகச் சில ஆண்டுகளில் இரண்டு
ஆண் குழந்தைகளுடன் திரும்பி வந்தார்.
தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் அவரை டைவர்ஸ் செய்துவிட்டதாகச்
சொல்லிவிட்டு மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் துவங்கினார். “அருணாச்சலம்”
படத்தில் ரஜியுடன் பிளாஷ்பேக் காட்சியில் தோன்றி தனது செகண்ட் இன்னிங்ஸை துவக்கினார்.
இந்த நேரத்தில் தொலைக்காட்சியிலும் நடிக்க வாய்ப்பு வரவே அதிலும் நடிக்கத்
துவங்கினார். அப்படி தன்னுடன் நடிக்க வந்த ரவிகாந்த் என்கிற நடிகருடன் ஜோடியாக
நடித்தவர், வெகு சீக்கிரத்தில் நிஜ வாழ்க்கையிலும் ரவிகாந்துடனேயே ஜோடி சேர
விரும்பினார். ரவிகாந்த் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர்.
பல
இரண்டாவது மனைவிகள் சொல்வதைப் போலவே, ‘ரவியின் முதல் மனைவி அவரைச் சரியாகப் புரிந்து
கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் ஒத்த கருத்துடையவர்கள். ஆகவே திருமணம் செய்து கொள்ளப்
போகிறோம்’ என்றார் அம்பிகா. ரவிகாந்த் தனது முதல் மனைவியை விவகாரத்து செய்த பின்பு,
இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த ஒருமித்த தம்பதிகள் பத்தாண்டுகள் கழித்து தங்களிடையே ஒத்து வரவில்லை என்பதை
உணர்ந்து முறைப்படி பிரிந்துவிட்டார்கள். பிரிந்த வேகத்தில் ரவிகாந்த் மீண்டும் ஒரு
திருமணம் செய்து செட்டிலாகிவிட்டது ஒரு தனிக்கதை!