ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JANUARY 05, 2010
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கிரிக்கெட் கழகம் அங்குரார்ப்பணம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்
கிரிக்கெட் கழகம் அங்குரார்ப்பணம்
தலைவராக பாஸ்வர சேனாங்க குணரத்ன தெரிவு
(வட கொழும்பு குறூப் நிருபர்)
மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முதன்முறையாக கிரிக்கெட் விளையாட்டுக்
கழகமொன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பாஸ்வர சேனங்க குணரத்ன
நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சம்மேளனத்தைச் சேர்ந்த
கிரிக்கெட் வீரர்களுக்கு இதில் அங்கத்துவம் பெற முடியும்.
இவ்வாண்டு (2010) நடைபெறும் அரச சேவைகள் கிரிக்கெட் போட்டித் தொடர் உட்பட, தேசிய
மட்டத்தின் கழகங்களுக்கிடையிலான சகல போட்டிகளிலும் இக்கழக கிரிக்கெட் அணி
பங்குகொள்ள தீர்மானித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் இதன் அங்குரார்ப்பண வைபவம் சிறப்பாக
நடைபெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:
தலைவர் பாஸ்வர சேனங்க குணரத்ன, பொதுச் செயலாளர் தீபால் ரணவீர, பிரதிச் செயலாளர்
திலங்க மடுகல்ல, பிரதித் தலைவர் ஆனந்த விக்ரமாரட்சி, பொருளாளர் சந்தன நாணயக்கார,
பிரதி பொருளாளர் ருவன் அம்பன்வல, பிரசார செயலாளர் சிந்தக தேஸப்பிரிய பிரானாந்து,
பயிற்றுவிப்பாளர் துமிந்த பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். (அ)