ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JANUARY 05, 2010
வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு நிதி உதவி
வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள
விளையாட்டு கழகங்களுக்கு நிதி உதவி
(வட கொழும்பு குறூப் நிருபர்)
வடக்கு மற்றும் கிழக்கு விளை யாட்டு வீரர்களுக்கு விளையாட்டு மைதானங்கள் மற்றும்
உபகரணங் கள் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துரித நட வடிக்கை மேற்கொண்டமை
பாரா ட்டத்தக்க விடயமென விளையாட் டுத்துறை மற்றும் பொதுப் பொழுது போக்கு அமைச்சர்
காமினி லொகுகே கூறினார்.
யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தின் புனர் நிர்மாண பணிகள், உட்பட வவுனியா மற்றும்
மன்னார் பகுதிகளில் வலைப் பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட விளையாட்டுகளுக்காக
புதிய விளையாட்டு மைதானங்கள் அமை க்க தற்பொழுது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு
வருகின்றது எனவும் அமைச்சர் கூறினார்.
அரச திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம் பெற்ற பத்திரிகையாளர்
சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பி ட்டார்.
இதன் போது தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் காமினி லொகுகே, “மஹிந்த சிந்தனை”யின்
திட்டத்திற்கு அமைவாக இவ் வாண்டு கிராமிய மட்டத்திலும் விளையாட்டுத்துறையின் அபிவிரு
த்தியினை இரு மடங்கு மேம்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“இவ்வாண்டு இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 7 விளையாட்டு மைதானங்களை புனர்
நிர்மாணம் செய்வதற்காக ஜனாதிபதியினால் 300 மில்லியன் ரூபா எமது அமைச்சுக்கு வழங்கப்
பட்டுள்ளன.
இது கிராமிய மட்டத்திலான வீரர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
இதன் மூலம் சகல மாவட்டங்களி லும் விளையாட்டு பயிற்சி பாட சாலைகள் அமைத்துள்ளோம்.
இவை கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலவிலும், புத்தளம் மாவட் டத்தில் மாதம்பையிலும்
மாத்தறை மாவட்டத்திற்காக திக்வெல்லை யிலும் அமைக்கப்படும்.
ஜூடோ, கராத்தே, ஹொக்கி, மல்யுத்தம் மற்றும் நீச்சல் வீர வீராங்கனைகள் 350 பேர்கள்
கொண்ட பயிற்சி அணி ஏற்கனவே இயங்கி வருகின்றது.
இது தவிர சர்வதேச விளை யாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்குச் செல்
லும் வீரர்களுக்கு இவ்வாண்டு இல வச விமானப் பயணச் சீட்டுகள் உட்பட தங்குமிட
வசதிக்கும் அனு சரணை வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது எனவும் அமை ச்சர்
இப்பத்திரிகையாளர் சந்திப்பின் போது மேலும் கூறினார். (அ)