ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. இவர் இதை
தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்தார்.
தமிழில் ஆரம்பம், காஞ்சனா-2 என ஒரு சில படங்களில் மட்டுமே தலையை காட்டினார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் பாலிவுட்டில் வந்த படம் PINK.
இப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது, வட இந்திய ரசிகர்கள் டாப்ஸியை தலையில்
தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.
வட இந்திய பேஸ்புக் பக்கத்தில் ‘பாலிவுட் ரூ 100 கோடியை தேடி ஓடுகிறது, ஆனால்,
டாப்ஸி போன்ற நல்ல நடிகையை நாம் இழந்துவிடுகிறோம்’ என்பது போல் ஷேர் செய்து
வருகின்றனர்.
கிட்டத்தட்ட நம்ம ஊரில் ரித்திகா சிங்கை எப்படி வரவேற்றார்களோ அப்படி ஒரு மரியாதை
டாப்ஸிக்கு கிடைத்துள்ளது, பலரும் அவருக்கு தேசிய விருதே கிடைக்கும் என்று கூறி
வருகின்றனர்.
இவை அனைத்தையும் பொறுமையாக பார்த்த டாப்ஸி ‘இவை அனைத்தும் எனக்கு தமிழ், தெலுங்கு
சினிமா கற்றுக்கொடுத்தது’ என மறைமுகமாக பாலிவுட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.