இணைந்த வடக்கு, கிழக்கில் இறைமையுள்ள சுயாட்சி
'எழுக தமிழ்' மக்கள் பேரணியில் பிரகடனம்யாழ்ப்பாணம் குறூப் நிருபர்
போதைப்பொருளைப் பயன்படுத்தி திட்டமிட்ட சீரழிவை நிறுத்த வேண்டும்
இணைந்த வடக்கு, கிழக்கின் தமிழர் தாயகத்தில் சுய நிர்ணய அடிப்படையில் ஒரு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என நேற்று யாழ் நகரில் நடைபெற்ற 'எழுக தமிழ்' பேரணியில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சியின் கீழ் எந்தத் தீர்வையும் ஏற்கப்போவதில்லை என்றும் புதிய அரசியல் யாப்பில் தமிழர்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த 68 ஆண்டுகால அனுபவத்தின் ஊடாக ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வொன்று எந்த வடிவத்திலும் சாத்தியமில்லை என்றும் நேற்றைய பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழர் தேசத்தின் தனித்துவத்தையோ தமிழ் மக்களின் சுய நிர்ணயத்தையோ அங்கீகரிக்காத, உள்ளடக்கத்தில் தௌிவில்லாத அரைகுறை தீர்வொன்றை ஏற்றுக்ெகாள்ள முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விவரம்» |