கோவளம் வெளிச்ச வீட்டிற்கு 100 வயது! இற்றைவரை கண்டுகொள்ளப்படாத அவலம்!
கோவளம் வெளிச்ச வீட்டிற்கு 100 வயது! இற்றைவரை
கண்டுகொள்ளப்படாத அவலம்!
கோவளம் வெளிச்ச வீடானது காரைநகரின் அளவிட முடியாத சொத்து. எந்தத் தீவுகளிலும்
இல்லாத இந்தப் பழமையான வெளிச்சவீடு, நமது வெளிச்சவீட்டிற்குத் தனி அழகும் கம்பீரமும்
உள்ளது எனலாம்.
அந்த வகையில் கோவளம் வெளிச்ச வீடானது 1916ஆம் ஆண்டு கட்டப்பெற்றது. இந்த ஆண்டு
அதாவது 2016ம் ஆண்டு நூறு வயதாகின்றது.
ஆனால், இன்று வரை அது எவராலும் புனரமைக்கப்படவில்லை. இது தொடர்பாக எமது செய்தி
பிரிவு உரிய அலுவலர்களிடமும் சில அரசியல் வாதிகளுடனும் தொடர்பு கொண்டபோது, கோவளம்
வெளிச்ச வீடானது இலங்கை தேசிய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்குச் சொந்தமானது
என்றும் அதைப் புனர்நிர்மாணம் செய்யவோ அல்லது வேறு திருத்த வேலைகளிற்கோ அவர்களிடம்
தான் அனுமதி கேட்க வேண்டும் என்றும் கேட்டாலும் பழமையை அழித்து விடுவார்கள் என்றும்
தரமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டனர்.
எது எவ்வாறு இருப்பினும் அதற்குச் செல்லும் பாதையைவது சீர்படுத்தி தாருங்கள் எனப்
பலமுறை பல அமைப்புக்கள் மனு கொடுத்தும் பாதை வரும் வரும் என்கிறார்கள் வந்தபாடில்லை.
‘செவிடன் காதில் ஊதிய சங்கு போல’ இந்த விடயம் பலருக்கும் கசப்பாகப் போய்விட்டது.