புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

மகளிர் மஞ்சரி

பிறக்கும் குழந்தை நிறைவான நிறையுடன் பிறக்க

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வைட்டமின் டி சத்து குறைவாக இருக்குமேயானால் பிறக்கும் குழந்தை எடை குறைவாக பிறப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

கருத்தரித்து 26 வாரங்களில் வைட்டமின் டி அளவு தாயாரின் உடலில் எந்த அளவு உள்ளது என்பதைப் பொறுத்து பிறக்கும் குழந்தையின் உடல் எடை தீர்மானமாகிறது.

மிகவும் இயற்கையான வைட்டமின் டி, சூரிய ஒளியில் உள்ளது. உணவு என்று எடுத்துக் கொண்டால், வைட்டமின் டி அதிகம் இருக்கும் உணவு என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.

எனவே வைட்டமின் டி குறைபாடு சூரிய ஒளி பற்றாக்குறையால் ஏற்படுவது என்பது தெளிவாகிறது. இதனால் கால்சியம், பாஸ்பரஸ், ஆகிய சத்துக்களும் பாதிக்கப்படுகிறது மேலும் எலும்பு வளர்சிதை மாற்றங்களும் பாதிப்படைகிறது.

ஏற்கனவே வைட்டமின் டி குறைபாடு, கருவின் அளவைத் தீர்மானிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது

கர்ப்பகாலத்தின் முதல் 3 மாதஙக்ள் மற்றும் 2ஆம் மூன்று மாதங்கள் காலக்கட்டத்தில் வைட்டமின் டி சத்தைப் பொறுத்து குழந்தையின் எடை தீர்மானிக்கப்படுகிறது.

வைட்டமின் டி மட்டும் குறைபாடாக இருந்து மற்றபடி ஆரோக்கியமாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்களில், வைட்டமின் டி குறைபாட்டினால் பிறக்கும் குழந்தை எடை வழக்கத்தை விட 46கிராம் எடை குறைவாக பிறப்பதாக, ஆய்வில் ஈடுபட்ட ஆலிசன் ஜெர்னான்ட் என்ற மருத்துவ ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதே முதல் 3 மாதத்தில் போதிய வைட்டமின் டி தாயார் உடம்பில் இல்லையெனில் கருவிலேயே குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறார் அவர்.

இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ நிபுணர்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. எனவே கர்ப்பமாக உள்ள பெண்கள் வெளியிலேயே தலைகாட்டாமல் வீட்டினுள் முடங்கும் பழக்கத்தை கைவிடுங்கள். உங்கள் குழந்தையின் எதிர்காலம் உங்கள் கையில் என்பதை மறந்து விடாதீர்கள்.


அறுசுவை முட்டை பிரியாணி:

தேவையான பொருட்கள்

முட்டை - 5

பிரியாணி அரிசி - அரைகிலோ

வெங்காயம் - இரண்டு

தக்காளி - மூன்று

இஞ்சி பூண்டு விழுது - இரண்டுகரண்டி

மிளகாய்தூள் - ஒருகரண்டி

கரம்மசாலாதூள் - ஒருகரண்டி

மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

தயிர் - 150 கிராம்

தேங்காய்பால் - 150 கிராம்

உப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் + நெய் - 100கிராம்

பட்டை சிறியதுண்டு

கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு

செய்முறை

அரிசியை உதிர் உதிராக வேகவைத்துக்கொள்ளவும்

முட்டையை வேகவைத்து தோல்களை உரித்துக்கொள்ளவும் அதை லேசாக கீறிக்கொள்ளவும்

வெங்காயம் தக்காளியை வெட்டிக்கொள்ளவும்

பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு மிளகாய்தூள் மஞ்சள்தூள் மசாலாதூள் போட்டு கிளறி முட்டையை போட்டு இரண்டு நிமிடம் போட்டு வதக்கவும் பின் தேங்காய்பால் தயிர் ஊற்றி ஒருகப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் வேகவிடவும் பின் உதிர்த்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறி தம்மில் போடவும் கடைசியில் எல்லாம் சேர்ந்தால் போல் வந்ததும் மேலே மல்லிக்கீரை தூவி அடுப்பை அ​​​ணைக்கவும்.


மருதாணியை விரும்பாத மங்கையர் உண்டா? மருதாணி இலைகள் பறித்து, அம்மியில் அரைத்து, சிறிது சிறிதாக எடுத்து, கை, கால்களில் இட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் கழுவிய பின், யாருக்கு அதிகம் சிவந்திருக்கின்றன என்று பார்க்க போட்டியே நடக்கும் அந்தக் காலத்தில். இப்போது அவ்வளவு எல்லாம் சிரமப்படத் தேவையே இல்லை. மெஹந்தி கோன், மெஹந்தி பேஸ்ட், மருதாணி பவுடர் என்று பல வடிவங்களில் மருதாணி கிடைக்கிறது. விரைவாக நிறமும் கிடைக்கிறது.

மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றன. மருதாணியின் மகத்துவத்தை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் வித்யா.கே.எம். ‘‘மருதாணியின் அறிவியல் பெயர் ‘லாசோனியா இன்னர்மிஸ்’. மருதாணி சிறிய புதர்ச்செடி போல நெருக்கமாக வளரும். இதன் இளம் இலைகள் வெளிர் பச்சையாகவும், முதிர் இலைகள் அடர் பச்சையாகவும் காணப்படும். இதன் இலைகள் கசப்புச்சுவை உடையவை.

மருதாணியில் ஹென்னா டோனிக் அமிலமும், நிறமூட்டக்கூடிய காரணிகளும் அடங்கியிருக்கின்றன. மருதாணியை ஆயுர்வேத மருத்துவத்தில் காயங்களை, கொப்புளங்களை சரியாக்கவும், இரத்தத்தைச் சுத்திகரிக்கவும், கூந்தல் வளரவும் பயன்படுத்துகிறோம்.

மருதாணி உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும். சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு மருதாணி அருமருந்தாகும். மருதாணி பூக்களை 3 கிராம் எடுத்து அரைத்து அதை சுடுதண்ணீரில் கலந்து, இரவு சாப்பிட்ட பின், தொடர்ந்து 3 மாதங்களுக்கு குடித்துவர, தூக்கம் இல்லாமை, முடி கொட்டுதல் இரண்டும் சரியாகி விடும்.

நகங்களில் வரும் பூஞ்சைக் கிருமி தாக்குதல், நகச்சுற்று போன்ற பிரச்னைகளுக்கும் மருதாணியை அரைத்துப் பூசி வந்தால் சரியாகும். நகங்களின் இடுக்கில் சீழ்கட்டி இருந்தால் மருதாணியுடன், மஞ்சள் அரைத்துப் பூசலாம். தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்வதால் வரும் சேற்றுப்புண்கள், வேனல் கட்டிகள், கொப்புளங்களுக்கும் மருதாணி நல்ல மருந்து. சருமம் சார்ந்த நோய்களுக்கு மூலகாரணம் இரத்தம் சுத்தமாக இல்லாததே. ரத்தத்தை சுத்திகரிக்க 12 கிராம் மருதாணி இலைகளை எடுத்து, சுடுநீரில் கொதிக்க வைத்து, டிகாக்ஷன் செய்து, அதில் 8 டம்ளர் தண்ணீர் கலந்து, ஒரு டம்ளர் வீதம் இரவு உணவுக்குப் பின் குடிக்கலாம். தோல் அரிப்பு, கொப்புளங்களும் நீங்கும்.


புருவ முடிகளை எடுக்கும் பெண்களே ஆயுளில் நீங்கள் இல்லை!!

இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.

எனக்குத் தெரிந்து ஸ்டிக்கர் பொட்டால் வரும்கேடுகள் பற்றி என்னதான் பெண்களிடம் எடுத்துச் சொன்னாலும் குங்குமம் அழிந்து விடுகிறது, என்றுகூறி ஸ்டிக்கர் பொட்டை விட மறுக்கிறார்கள்.

பெண்ணைப் பேதை எனச் சொன்னதற்காக, தன்னுயிரை தானே அழிக்கும் அளவு இவ்வளவு பேதமையாகவா இருப்பது?

இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு!!!!

புருவமுடிகளைத் திருத்துகிறோம் (THREADING) என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி விளக்க இருக்கிறேன். புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் போது புருவ முடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும்.

உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன.

இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது (THREADING), கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்தவர்மம் (பொட்டு வர்மம் (அல்) சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழிபிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.

இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர். இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன.


உங்கள் குழந்தைகள் சளி தொல்லையால் அவதிப்படுகின்றனரா?

மழை மற்றும் குளிர்காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள் சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் காய்ச்சல் கூட வரும். மலம் வெளியேற சிரமப்படுவார்கள். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள்.

பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்கு மூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சினையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல மருந்தினை எடுத்துக் கொள்ளலாம்.

தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா, துளசி இவற்றின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனிலோ அல்லது வெந்நீரீலோ கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, கபக்கட்டு போன்றவை குணமாகும். துளசி இலைகளை பறித்து நசுக்கி அப்படியே சாறு எடுத்து மருந்துக்கு கொடுப்பார்கள். இப்படி செய்வது தவறு. ஏனெனில் துளசி இலையில் உள்ள மெல்லிய சுனைகள் குழந்தைகளுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.


நெற்றியில் பொரிப்பொரியாக வருகின்றதா?

சிலருக்கு நெற்றி முழுவதும் பொரிப்பொரியாக இருக்கும். எவ்வளவு செய்தும் ஒரு பலனும் இல்லை என்று புலம்புவார்கள்.

இதற்கு முதலில் என்ன காரணம் என்று ஆராய வேண்டும்

பொதுவாக தலையில் பொடுகு இருப்பவர்களுக்கு அல்லது தலை சுத்தமாக இல்லாமல் இருப்பவர்களுக்கு நெற்றியில் இப்படி வரும்.

தலையில் இருக்கும் பொடுகு துகள்கள் நெற்றியில் விழுந்து அங்கேயே தங்கிவிடும். அந்த இடங்களில் எல்லாம் இப்படி பொரிப்பொரியாக வரும்.

சிலருக்கு முகப்பரு போன்று கன்னத்திலும் பொரிப்பொரியாக வந்திருக்கும். இவையும் தலையின் காரணமாக வந்தவைகள்தான்.

இதற்கு நிரந்தர தீர்வு உண்டு.


'குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே ' என்ற கவலையா ? இனி கவலை வேண்டாம் !!

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அட்வைஸ், சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான்.

சமையலில் அதிகம் இடம் பிடிக்கும் பூண்டுக்கும் தாய்ப்பாலை பெருக்கும் சக்தி உள்ளது. அதற்கு என்ன செய்யலாம்?

தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.

தாய்ப்பாலை பெருக்குவதோடு மேலும் பல நன்மைகளையும் பூண்டு நமக்கு தருகிறது. தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு.

இதனால்தான் குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கு குளிக்கும்போது நல்லெண்ணையைக் காய்ச்சி, அதில் சிறிது பூண்டும் போட்டு, அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்யும் வழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.


கர்ப்பம் தரித்தலும் சில அறிவுரைகளும்

கர்ப்பம் தரித்தல் எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுவதாகும். இது அந்த தாயின் முதலாவது பிள்ளையாக இருக்கலாம் இல்லை நான்காவது பிள்ளையாக இருக்கலாம். எத்தனையாவது கர்ப்பம் என்றாலும் சில சந்தேகங்கள் எல்லாரிடமும் இருக்கும். இதே மாதிரி திருமணமானவுடன் புதுமணதம்பதிகள் விரும்பியோ விரும்பாமலோ எதிர்நோக்கும் ஒரு கேள்வி “இன்னும் வயிற்றில் ஒன்றும் உருவாக இல்லையா” என்பதாகும்.

கர்ப்பமாகிய முதல் மூன்று மாதங்களும் மிகவும் முக்கியமானது. இந்த ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம்.

பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் ஆரம்ப கர்ப்ப காலத்தில் பெரியளவில் எந்த பிரச்சினைகளையும் வருவதில்லை. ஏனெனில் கர்ப்பம் தரித்தல் ஒரு சாதாரண நிகழ்வாகவே கருதப்படுகிறது (normal physiology).

ஒரு சுகதேகியான பெண் இலகுவில் கர்ப்பம் தரிக்கும் சாத்தியங்கள் அதிகம். ஏதாவது வருத்தங்கள் (வலிப்பு நோய், இதய வருத்தம்) இருப்பின், தாயாக முதல் உரிய மருத்துவ ஆலோசனைகளை பெற்றுகொள்ளுதல் சிறந்தது. (Re -pregnancy counseling) தாயாகுதலை எதிர்பார்த்து இருக்கும் பெண்களுக்கு அவர்களுடைய மாத சுகவீனம் தள்ளிப்போகும் போது கர்ப்பம் தரித்துள்ளதா என்பதை மிக இலகுவில் ஒரு சிறுநீர் பரிசோதனை(urine pregnancy test) மூலம் சோதித்து அறிந்து கொள்ளலாம்.

பின்னர் அவர் தனது பகுதியிலுள்ள கிளினிக்கில் பதிந்து மேலதிக கவனிப்புகளை பெறலாம்.

இவ்வாறு செய்யும் போது சில அடிப்படை பரிசோதனைகளையும், மேலதிக சோதனைகளையும் செய்ய வேண்டி வரும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.