2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் ரவி கருணா நாயக்கவினால்
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு பொருளாதார
அபிவிருத்தி யோசனைகள் முன் வைக்கப்பட்டதோடு வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான
நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
காஸ், கடலை, பருப்பு, ரின் மீன், பால்மா, உருளைக்கிழங்கு, மண்ணெ ண்ணெய், கருவாடு
அடங்கலான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இது வாழ்க்கைச்
செலவை கணிச மானளவு குறைப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
அதேநேரம் வரி முறைகளில் இருந்துவந்த சிக்கல்களைத் தளர்த்தி ஏற்றுமதி, இறக்குமதி
பொருளாதாரத்துக்கும் இந்த பட்ஜெட் வழிவகுத்துள்ளதென பொருளாதார நிபுணர்கள் தெரி
விக்கின்றனர்.
நிதிய மைச்சரினால் சமர்ப் பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட் டத்தின் சாராம்சங்கள்:
* கடவுச்சீட்டு ஒருநாள் சேவை 7 ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக
அதிகரிப்பு.
* மீன் வலைகளுக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு.
* தேயிலை, இறப்பர் துறைகளுக்கு சலுகைகளை வழங்குவதற்காக பெருந்தோட்ட கம்பனிகளுக்கு
02 வருட வரி விதிப்பு.
* 200 மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் பொருளாதார வலயம்.
* இறக்குமதி செய்யப்படும் ஆபரணங்களுக்கு 10 வீத செஸ்வரி.
* அரச காணிகளில் முறையற்ற கொடுக்கல் வாங்கல்களை ஒழிக்கும் நோக்கில் காணி வங்கியொன்று
உருவாக்கப்படும்.
* சேரிவாழ் மக்களுக்கு ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும்.
* அரசாங்கத்தின் சிரேஷ்ட ஊழியர்களுக்காக 05 ஆயிரம் வீடுகள்.
* வீடுகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வரிச்சலுகை வழங்கப்படும்.
* புதிய நகர மண்டபத்திற்கு அருகில் 07 ஆயிரம் இருக்கை வசதிகளைக் கொண்ட கண்காட்சி
கூடம் அமைக்கப்படும்.
* கொழும்பு டி.ஆர். விஜயவர்தன மாவத்தையை உள்ளடக்கியதாக 03 இலட்சம் சதுர அடிகளைக்
கொண்ட சர்வதேச நிதி மையம் அமைக்கப்படும்.
r நகை அடவுபிடிக்கும் வியாபாரத்திற்கான பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாவாக
அதிகரிக்கப்படும்.
* சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலைக்கு அனுமதிக்கும் பிள்ளைகள் பெயரில் 250
ரூபாவை வைப்பிலிட்டு ஒரு வங்கி கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.
* அனைத்து ஆசிரியர்களும் தொழிலில் இணைந்து 05 வருடத்திற்குள் 02 வருட முழு நேர
பயிற்சி நெறியை பூர்த்தி செய்ய வேண்டும்.
* 2016 இன் முடிவில் அனைத்து பாடசாலைகளுக்கும் குழாய் நீர், மலசலகூடம், மின்சார
வசதிகள் வழங்கப்படும்.
* பெருந்தோட்ட பாடசாலைகளை தரமுயர்த்த 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
* புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் நூல்களுக்கான இறக்குமதி தீர்வை நீக்கப்படும்.
* ‘மஹாபொல பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் புதிதாக பல்கலைக்கழகமொன்று தாபிக்கப்படும்.
* கிளிநொச்சியில் பொறியியல் பீடமும் வவுனியாவில் விவசாய பீடமும் அமைக்கப்படும்.
* பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிக்கப்படும்.
* பங்கு கொடுக்கல், வாங்கல் அறவீடு நிர்மாண கைத்தொழில் உத்தரவாத நிதிய அறவீடு,
சொகுசு மற்றும் அரைச்சொகுசு மோட்டார் வாகன வரி, சுற்றுலா அபிவிருத்தி அறவீடு வரிகள்
நீக்கம்.
* முதியோரின் நிரந்தர வைப்பிற்கு ஜனவரி முதல் 2.5 வீத நிறுத்தி வைப்பு வரி நீக்கம்.
* வியாபார நோக்க மோட்டார் வாகனங்களுக்கு அனுமதிப்பத்திர கட்டணம் அறவீடு.
* சலுகை அடிப்படையிலான வாகன அனுமதிப்பத்திர திட்டம்.
* 2016 ஜனவரிக்கு பின் அரச சேவையில் இணைவோருக்கு ஏற்புடையதாகாது.
* கடனடிப்படைகளுக்கான 1.5 வீத முத்திரை தீர்வு நீக்கம்.
* மாளிகை வரி தொடர்ந்து அமுல்.
* வடிசாலைக்கான வருடாந்த தயாரிப்பு உரிம கட்டணம் 150 மில்லியனாக அதிகரிப்பு.
* வதிவிட விசாவுக்கு 250,000 டொலர் கட்டணம்.
* கம்பனி பதிவுக்கட்டணம் 7500 ரூபா.
* வீதி விபத்துக்களால் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் இழப்புக்கான நஷ்ஈடு 10
ஆயிரமாக அதிகரிப்பு.
* அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்த 10,000 மில்லியன் ஒதுக்கீடு.
* சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி மானியம் வழங்க 1500 மில்லியன் ஒதுக்கீடு.
* பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாட்டை நீக்க 3000 மில்லியன் ரூபா.
* வடக்கு, கிழக்கு நெடுஞ்சாலை அபிவிருத்திக்கு 14,000 மில்லியன் ரூபா.
* தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 1000 மில்லியன் ரூபா.
* இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வசதிகளை மேம்படுத்த 500 மில்லியன் ரூபா.
* அடுத்த வருட ஏப்ரல் மாதம் முதல் இலங்கையில் வருடாந்த இரத்தினக்கல் ஏலம்.
* அனைத்து விடுதிகளையும் அபிவிருத்தி சபையின் கீழ் கொண்டு வருவது கட்டாயம்.
* 10 வருடத்திற்கு மேல் அரச காணியில் வாழ்ந்தவர்களுக்கும் தோட்ட மக்களுக்கும் காணி
உறுதி.
* தமிழ் நாடகங்களுக்கும், படங்களுக்கும் வழங்கு சலுகை ஆங்கில நாடகங்களுக்கும் வழங்க
நடவடிக்கை.