புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 
புலிகள் குறித்து ஆரூடம் கூறிய சோதிடருக்கு வந்த சோதனை

புலிகள் குறித்து ஆரூடம் கூறிய சோதிடருக்கு வந்த சோதனை

மக்கள் அமைதி மற்றும் ஒற்றுமையை மீறும் வகையில் ஆரூடம் கூறியமையினால், சோதி டரான மஞ்சுல பீரிஸிக்கு எதிராக மிரிஹான காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட் டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சோதிடர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஆரூடம் கூறியிருந்தார்.

குறித்த நிகழ்ச்சியின் போது, இம்முறை பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்திற்கு வரவில்லை என்றால் நாட்டில் மீண்டும் விடுதலை புலிகள் தலை தூக்கும் என தெரிவித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தமையினால் சர்வதேச சமூகம் எங்கள் நாட்டின் மீது ஆத்திரம் கொண்டுள்ளதாகவும் அந்த சவால்களை எதிர்நோக்கக் கூடிய தலைவர் அதிகாரத்திற்கு வரவில்லை என்றால் நாட்டில் ஏற்படவுள்ள ஆபத்தில் இருந்து மீட்டெடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டிருந்தார்.

சட்டத்தரணி யசஸ் டி சில்வா இம் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளதுடன், தேர்தல்கள் ஆணையாளருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அந் நிகழ்ச்சியை ஒளிபரப்ப கூடாதென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.