புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 
நீதியான, நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் உள்ளது

நீதியான, நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் உள்ளது

சர்வதேச கண்காணிப்பாளர்கள் கருத்து வெளியீடு

இலங்கையில் நீதியான, நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் உள்ளதாக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப் பாளர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலையமைப்பின் சர்வதேச கண்காணிப் பாளர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களுக்கு விஜயம் செய்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் வேண்.முகோளின் பேரில் சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலையமைப்பின் சர்வதேச கண்காணிப்பாளர்களான சாரா அன்வர், பிலிதும் ட்ரயகேசம் தலைமையிலான குழுவினர் இந்த கண்காணிப்புக்களை மேற்கொண்டனர்.

அங்கு இவர்கள், இலங்கையில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலின் போது வேட்பாளர்களின் செயற்பாடுகள், வாக்காளர்களின் நிலைமை, தேர்தல் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். தமக்கு இதுவரையில் எதுவித தேர்தல் முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையென குறித்த கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். தாங்கள் சென்ற பகுதிகளில் நிலைமை சுமுகமான நிலையில் காணப்பட்டதாகவும். எதிர்வரும் தேர்தல் நீதியான நேர்மையான முறையில் நடைபெறுவதற்கான சூழல் நிலவுவதைக் காணக்கூடியதாகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.