தேர்தல் வரலாற்றில் வன்முறைகள் குறைந்த பாராளுமன்றத் தேர்தல்
196 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 6,151 வேட்பாளர்கள் போட்டி:
நாளை தேர்தல்; ஏற்பாடுகள் பூர்த்தி
ஒரு கோடி 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்கத் தகுதி
பதினைந்தாவது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நாளை (17) நடைபெறுகிறது. காலை 7
மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கெடுப்பை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.
196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில், 6151 வேட்பாளர்கள்
போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளில் 3653 வேட்பாளர்களும்,
சுயேச்சைக் குழுக்களில் 2498 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இவர்களைத் தெரிவு செய்வதற்காக 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி ஒரு கோடியே
50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
விவரம் |