புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 
கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளம்

கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளம்

நாளை முதல் அமுல்

கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளத்தைப் பதிவு செய்யும் நடைமுறை நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட வுள்ளதாகவும் 16 வயதுக்கு மேற்பட்டவருக் கான கடவுச் சீட்டில் விரல் அடையாளம் பதிவு செய்யப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டார்.

16 வயதுக்குக் குறைந்தவர்களுக்கான கடவுச்சீட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்படமாட்டாது. இதன் பொருட்டு, கொழும்பு பிரதான அலுவலகம் உட்பட மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிராந்திய அலுவலகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நாளை திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கின்றவர்கள் தமது விரல் அடையாளத்தை வழங்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடிய கல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். விரல் அடையாளங்கள் கணனி மயமாக்கப்பட்டு கடவுச்சீட்டுக்களில் அடையாளத்தின் பொருட்டு உள்ளடக்கப்படுவதற்கு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.