இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறு வனங்களில் ஒன்றான ஜனசக்தி காப்புறுதி நிறுவனம்
அதன் கிளை நடவடிக்கை களை 12 பிராந்தியங்களில் விஸ்தரித் துள்ளது. ஜனசக்தி நிறுவனம்
சுமார் ஓராண்டிற்கு முன்னர் ஒரு முக்கிய ஸ்தா னத்தில் அதன் ஆயுள் நிலையத்தை
அங்குரார்ப்பணம் செய்திருந்தது.
"எமது ஆயுள் விற்பனை குழுவினரின் தொடர்ச்சியான தொழில்சார் விருத்திக் கான ஆண்டாக இது
அமைந்திருந்தது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் பொருட்டு அவர்
கள் தமது திறன்களை மேம்படுத்திக் கொண் டுள்ளனர். இந்த விற்பனை குழு பிரதி நிதிகள்
நாடுமுழுவதும் எமது பிரசன்னத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு தமது திறன் களை
பயன்படுத்துவர் என நாம் நம்பு கின்றோம்" என ஆயுள் விற்பனை (கூட்டாண்மை விற்பனை
மற்றும் மூலோபாய தொடர்பு அபிவிருத்தி) பிரிவின் உதவி பொது முகா மையாளர் நிலங்க
கருணாரத்ன தெரி வித்தார்.
இந் நிலையத்தில் விற்பனை ஊழியர்க ளின் செயற்பாடுகளை மேம்படுத்தல் எனும் நீண்டகால
குறிக்கோளுடன் பணிக்கமர்த் தப்படும் ஊழியர்களுக்கு விரிவான பயிற்சி கள் மற்றும்
அபிவிருத்திகள் வழங்கப்படு கின்றன. தொழில் ரீதியாக உருவாக்கப்பட்ட இந்த ஊழியர்கள்
தற்போது மேல்மாகாணம் முழுவதுமுள்ள 12 முக்கிய இடங்களில் பதவிகளை வகித்து வருகின்றனர்.
இதில் கந்தானை, நீர்கொழும்பு, வத்தளை, கம் பளை, அவிசாவளை, மினுவங்கொட, ஹேமா கம,
தெஹிவளை, நுகேகொட, பத்தரமுல்ல, அத்துருகிரிய மற்றும் புறக்கோட்டை போன்ற பிரதேசங்கள்
உள்ளடங்குகின்றன.
"ஆயுள் காப்புறுதி நிலையத்தின் முத லாவது ஆண்டு நிறைவு கடந்த ஜ{ன் மாதம் 3ஆம் திகதி
பு+ர்த்தி செய்யப்பட்டி ருந்தது. கடந்த ஆண்டு ஆயுள் நிலையத் தைச் சேர்ந்த விற்பனை
குழுவினருக்கு நாம் பயிற்சி அளித்திருந்ததுடன், தற்போது அவர்கள் மேலதிக
பொறுப்புக்களையும் பொறுப்பேற்கக்கூடிய நிலையில் காணப் படுகின்றனர். மிக முக்கிய
பிரிவுகளில் அவர்களை பயன்படுத்த நாம் தீர்மானித்த துடன், இதனூடாக ஜனசக்தி வளர்ச்சியு
டன் இணைந்து அவர்கள் தம்மை மேம் படுத்திக்கொள்ள முடியும்" என ஆயுள் (விற்பனை மற்றும்
செயற்பாடுகள்) பிரி வின் பொது முகாமையாளர் ஹஷ்ர வீர வர்தன தெரிவித்தார்.
தமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் வகையில் தற்போது 110 இற்கும்
மேற்பட்ட கிளைகளில் ஜனசக்தி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.