நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற் குட்பட்ட மஸ்கெலியா பாக்ரோ
தோட்டத்தில் நேற்றுச் சனிக் கிழமை காலை 11 மணியள வில் கொழுந்து பறித்துக்
கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் போது தேயிலை மரத்தின் அடிப்
பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூட்டம் தங்களை இவ்வாறு தாக்கியுள்ளதாக
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான 8 பேரும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளவி தாக்குதலுக்கு இலக்கானவர்களில் 7 பெண்களும் 1 ஆணும் அடங்குகின்றனர்.
இதில் இருபெண் தொழிலாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மஸ்கெலியா வைத்தியசாலை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.