புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
60 செய்மதி றிkவர்களுடன் கட்டுநாயக்காவில் ஒருவர் கைது

60 செய்மதி றிkவர்களுடன் கட்டுநாயக்காவில் ஒருவர் கைது

தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி பெங்களூரிலிருந்து செய்மதி தொலைபேசிகள் மற்றும் அதற்கு தேவையான 200 உபகரணங்களை கொண்டு வந்த கொழும்பைச் சேர்ந்த ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் மற்றொரு பயணப்பையிலிருந்து 50 கிலோ கிராம் விதைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். இந்த விதைகள் கமத்தொழில் திணைக்களத்தின் அனுமதியின்றி கொண்டுவரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 43 வயதான இவர் அடிக்கொரு தடவை இந்தியாவிற்கு சென்று வருபவர் என்றும் இந்தியாவிலிருந்து நேற்று அதிகாலை இலங்கைக்கு வந்த விமானத்திலேயே அவர் வந்திறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.