வடபகுதி மீனவர் சங்க பிரதிநிதிகளையும் உள்ளடக்கியே இந்திய தரப்புடன் பேச்சு
வடபகுதி மீனவர் சங்க பிரதிநிதிகளையும் உள்ளடக்கியே இந்திய தரப்புடன் பேச்சு
பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்கிறார் அந்தோனி முத்து
இலங்கை - இந்திய மீனவப் பிரதிநிதிக ளுக்கிடையேயான பேச்சுவார்த்தை இம்மாதம் இரண்டாம்
வாரத்தில் இடம்பெறக்கூடிய வாய்ப்புள் ளது. வட பகுதி மீனவப் பிரதிநிதிகள் பங்களிப்
புடனேயே இரு நாட்டு மீனவப் பிரதி நிதிகளின் பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று மீன்
பிடித்துறை அமைச்சின் ஆலோசனை சபை உறுப் பினரும் இலங்கை - இந்திய மீனவர் அமைப்பின்
இணைப் பாளருமான எஸ்.பி. அந்தோ னிமுத்து விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய மத்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடில்லி செல்ல விருக்கும்
அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தனவை தமிழக மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்திப்பதற்கும்
விருப்பம் தெரிவித் துள்ளதுடன் இச்சந்திப்பின் இணைப்பா ளராகவும் செயற்படும்
அந்தோனிமுத்து மீனவர் அமைப்பின் தலைவருமான என். தேவதாஸ் தலைமையில் 10 பேர் கொண்ட
பிரதிநிதிகள் கலந்து கொள்ள விருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் வடபகுதி மீனவர்களுக்கு அழைப்பு