புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
கொழும்பிலிருந்து சென்ற பருத்தித்துறை பஸ் மீது கல்வீச்சு

கொழும்பிலிருந்து சென்ற பருத்தித்துறை பஸ் மீது கல்வீச்சு

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்கு வரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மீது இக்கிரிக்கொல்லாவையில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள் ளப்பட்டுள்ளது. இதில் சாரதியான அல் வாய் பகுதியினைச் சேர்ந்த எஸ்.யோகராஜா (45) காயமடைந்துள்ளார்.

கல்வீச்சுத் தாக்குதலினால் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளதுடன் சாரதிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்ப வம் தொடர்பாக மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சாரதி முதலுதவியினை செய்துவிட்டு, பயணிகளுடன் பருத்தித்துறையை சென்றடைந்தார்.

யாழ். கொழும்பு பேரூந்துகள் மீது மதவாச்சி பிரதேசங்களில் வைத்து அண்மைக்காலமாக பரவலாக கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.