புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
கொழும்பிலிருந்து முதலைக் கண்ணீர் வடிக்காது யாழ். வருமாறு அழைப்பு

பரபரப்பிற்காக ஊடக அறிக்கை விடவேண்டாம்

கொழும்பிலிருந்து முதலைக் கண்ணீர் வடிக்காது யாழ். வருமாறு அழைப்பு

வடக்கு மக்கள் பாதுகாப்பு அமைப்பு அறைகூவல்

கொழும்பிலிருந்துகொண்டு சகலவிதமான சொகுசுகளையும் அனுபவித்துக் கொண் டிருக்கும் அரசியல்வாதி நல்லையா குமரகுருபரன் யாழ்ப்பாணத்திற்கு வந்து உண்மை நிலையை அறிந்து செல்ல வேண்டும். வெறுமனே தமது பரபரப்பிற்காக ஊடகங்களில் அறிக்கையை விட்டு மக் கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முனை யக் கூடாது என்று வடக்கு மக்கள் பாது காப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

குமரகுருபரன் அவர்கள் தெரிவித்தது போன்று யாழ்ப்பாணத்தில் எதுவும் நடைபெறவில்லை. அவை யாவும் அவரது கற்பனையே. உண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சில சம்பவங்களுக்கு தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் சிலரே காரணமாக உள்ளனர். அண்மையில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவத்திற்கு ஒரு அரசியல்வாதியே நேரடிக் காரணம். அவர் அன்று சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுக்கு உசுப்பேற்றி படையினருடன் மாணவரை மோத வைத்தார். இன்று அவர் கொழும்பில், மாணவர்கள் புனர்வாழ்வு முகாமில். இதுவே உண்மை.

எனவே கொழும்பிலிருந்துகொண்டு அறிக்கை விடாது நேடியாக வந்து யாழ்ப்பாண நிலைமைகளை அவதானித்துச் செல்லுமாறு தாம் அழைப்பு விடுப்பதாகவும் மக்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.