ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதாகிய நிலையில் தப்பியோடிய
தேவகே துசித்த எனும் குடு நிலான் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவு இவரை கைது செய்ததாக
பொலிஸார் கூறினர்.
500 கிராம் ஹேரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கடந்த ஜூன் 20 ஆம்
திகதி தலங்கமவில் கைதானார். கடந்த ஜூன் 26 ஆம் திகதி சந்தேக நபர் கடுவல நீதவான்
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் ஜூன்
28 ஆம் திகதி சுகவீனம் காரணமாக ராகம ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
29 ஆம்
திகதி இரவு ஆஸ்பத்திரி மலசல கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளை சந்தேக நபர்
தப்பிச் சென்றார். வேறொருவரின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டில்
வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்
சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.