ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 
வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்க ஆணையர் கோரிக்கை

வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்க ஆணையர் கோரிக்கை

தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறை பெற்றுக்கொடுக்குமாறு தொழில் தருநர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார். மாகாண சபை தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வாக்களிக்க உரித்துடைய நபரொருவர் எழுத்து மூலம் கோரினால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு விடுமுறை வழங்கத் தவறினால் 500 ரூபாவுக்குக் குறையாக தண்டமோ ஒரு மாத காலத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனையோ வழங்க முடியும். அல்லது இரு தண்டனைகளையும் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் தனியார், அரச துறை தொழில் தருநர்கள் தமது நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு கோரியுள்ளார்.

செப்டெம்பர் 20 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி