ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விபத்துகள்: நால்வர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விபத்துகள்: நால்வர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் நால்வர் கொல்லப்பட்டனர். கொழும்பு - நீர்கொழும்பு மகாபாகே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் கொல்லப்பட்டனர். யாழ்ப் பாணத்திற்கு சுற்றுலா பயணம் சென்று விட்டு திரும்புகையில் இவர் கள் பயணித்த சிறிய ரக லொறி, கொள் கலன் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்தது.

மாவத்தகம, பிடகந்த வத்தை பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பமொன்றுடன் மோதியது. இதில் 44 வயதான நபர் இறந்துள்ளார்.

புத்தள - வெள்ளவாய வீதியில் பெலவத்த சந்திக்கருகில் வைத்து திடீரென வீதியை கடந்து செல்ல முற்பட்ட பெண் ஒருவர் காறொன்றில் மோதி விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த 45 வயதான பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின் இறந்துள்ளார். காரோட்டி வந்தவர் மருத்துவர் எனவும் சந்தேக நபர் நேற்று வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை பட்டபொல ஊடாக பயணித்த பஸ்ஸொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஆறுபேர் காயமடைந்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி