ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் மாதம் பிறை 27
ஜய வருடம் வைகாசி மாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, MAY ,27, 2014
வரு. 82  இல. 124
 

யானைகளை விரட்டுவதற்கு மாற்றுவழி தேவை

யானைகளை விரட்டுவதற்கு மாற்றுவழி தேவை

மாத்தளை மாவட்டத்தின் லக்கல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சில கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூட்டமாகப் பிரவேசிக்கும் யானைகள் வீடுவாசல்களைச் சேதமாக்குவதுடன் பயிர்களையும் அழித்து வருகின்றன.

மின்சாரவேலிகள் முழுமையான பலன் தருவதில்லை. யானைகள் மின்சார வேலிகளுக்குப் பழக்கப்பட்டு விட்டன, மின்சார வேலிகளை உடைத்தெறிந்து கொண்டு யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசிக்கின்றன. எனவே யானைகள் கிராமங்களுக்குள் வராமல் தடுப்பதற்கு வேறேதும் மாற்றுவழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென மக்கள் கூறுகின்றனர்.

ஆபிரிக்காவில் யானைகளை விரட்டுவதற்கு ஊதுகுழல் மூலம் ஒலியெழுப்பும் முறை கையாளப்பட்டு வருகிறது. அம்முறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவது சிறந்ததென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி