ஆப்கானில் ஐயாயிரம் தேர்தல் அதிகாரிகள் பதவி நீக்கம்
ஆப்கானில் ஐயாயிரம் தேர்தல் அதிகாரிகள் பதவி நீக்கம்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரலில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று
வாக்குப்பதிவின்போது ஏமாற்று வேலையில் ஈடுபட்டார்கள் என்று குற்றம்சாட்டி தேர்தல்
ஆணைய ஊழியர்கள் ஐயாயிரம் பேரை அவ்வாணையம் பதவிநீக்கம் செய்துள்ளது.
வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகளே
பதவிநீக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள்.
வரும் ஜ_ன் 14ஆம் திகதி நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று
வாக்குப்பதிவில் பணியாற்ற பதவிநீக்கப்பட்டவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என
ஆப்கானிஸ்தானின் சுயாதீனமான தேர்தல் ஆணையத்தின் தலைவரான யு+ஸ{ப் நூரிஸ்தானி கூறினார்.
தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் மூத்த அதிகாரிகள்
சிலரையும் பதவிநீக்கும்படி நாட்டின் உள்துறை அமைச்சரிடம் நூரிஸ்தானி
கேட்டுக்கொண்டுள்ளார்.