ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் மாதம் பிறை 27
ஜய வருடம் வைகாசி மாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, MAY ,27, 2014
வரு. 82  இல. 124
 

சிறு நீர்ப்பாசனக் கால்வாய்களை புனரமைக்க 400 மில்லியன் ரூபா நிதி

சிறு நீர்ப்பாசனக் கால்வாய்களை புனரமைக்க 400 மில்லியன் ரூபா நிதி

மாத்தளை மாவட்டத்தில் 160 (நூற்றி அறுபது) நீர்ப்பாசன கால்வாய்களைப் புனரமைப்பதற்கென அரசாங்கம் 400 மில்லியன் ரூபா நிதியைப் பெற்றுக் கொடுத்திருப்பதாக மாத்தளை மாவட்ட அரச அதிபர் திருமதி ஹெலன் ஏ. மீகஸ்முல்ல தெரிவித்தார். சிறு சிறு நீர்ப்பாசனக் கால்வாய்களைப் புனரமைப்புச் செய்யும் இத்திட்டத்தின் கீழ்.

7500 ஏக்கர் வயல் நிலங்களில் உரிய காலத்தில் விவசாய நடவடிக்கை களை மிகவும் சுலபமாக விவசாயிகளிளால் மேற்கொள்வ தற்கு வாய்ப்பேற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக மாத்தளை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சிறு நீர்ப்பாசனக் கால்வாய்கள் புனரமைப்புச் செய்யப்படும் எனவும் கூறினார்.

மாத்தளை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் அரச அதிப ரின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத் தின் போது இவ்விபரங்களை அவர் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி