இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டி; இந்திய மகளிர் அணி வெற்றி
இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டி;
இந்திய மகளிர் அணி வெற்றி
இலங்கை மகளிர் அணியுடனான இரண்டாவது இருபது - 20 போட்டியில் இந்திய மகளிர் அணி 9
ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட இருபது - 20
தொடர் 1-1 என சம நிலைக்கு வந்தது.
இந்தியாவில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி விஜியநகரத்தில் நேற்று
நடை பெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி 20 ஓவர்களுக்கும் 8
விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது. கோஸ்வாமி, ஷர்மா மற்றும் சோனியா
டபிர் ஆகியோர் தலா 23 ஓட்டங்களைப் பெற்றனர். இலங்கை மகளிர் சார்பில் பிரபோதனி 3
விக்கெட்டுகளை பதம் பார்த்தார்.
128 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள்
முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களையே எடுத்தது. ஐயங்கனின் அதிகபட்சமாக
40 ஓட்டங்களைப் பெற்றார்.